புரட்சிக் கோட்டைக்குள்ளே நானும் நுழைந்து விட்டேனே!-இனி
எந்தன் தேசத்து மக்களுக்கெல்லாம் விடிவு காலமே!-தோல்வி
எனற எதுவும் என்னை இனியென்றும் அணுகாது உறுதியே!தனியுடைமை
எந்த தடையும் என்னை எதுவும் செய்திட முடியாதே!
உழைப்பவரின் ஒற்றுமை நம்மோடே உள்ளவரையினில்
நெருங்காதே தோல்விகளே நம்முரிமைப் போரினிலே!- நமதுண்மை
சுதந்திர போரினிலே எத்தனை தியாகிகள் பலியானாரோ?-அவரின்
அடிச்சுவட்டினில் நாமும் தியாகதீபத்தை ஏற்றி வைப்போமே!
இதுவரை நடந்த போராட்டமெல்லாம் நாமே
அனுபவமாக்கியே வீறு நடை போடுவோமே?
வறுமையில்லாத பொன்னுலகை உருவாக்குவோமே!
உரிமைவெல்லும் வேள்வியிலே அடியெடுப்போமே!~
மார்க்சீய தத்துவத்தை காலத்திற்கேற்ப நடைமுறையில்- நம்
நாட்டிற்குகந்த நல்வழியினில் செயல்வழியில் முன்னேற்றுவோமே!
ஏகாதிபத்தியத்தை கண்டு ஒருபோதும் அஞ்சிடோமே!
மேதைலெனின் ,ஸ்டாலினின் நல்வழியினில் பொதுவுடைமையாம்
மேதகு பாதையினில் காலத்திற்கேற்றவாறு நல்லுலகினைப் படைத்திடுவோமே!
”
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக