நெஞ்சகத்தில் நீயிருக்க நின்னையல்லால் ஒருவரையே நினைத்திடுவேனோ?
அஞ்சுகமே நீசிரிக்க நான்சிரிக்க நாளெல்லாம் சந்தோசம் தானோ?
வஞ்சகமே வீழ்த்துகின்ற நல்லுள்ளம் கொண்டு இருப்பது சரிதானே!
இச்சகத்தில் தனியுடைமை அழிக்கின்ற செயல்தத்துவம் முறைதானே!
புதன், 20 அக்டோபர், 2010
தமிழ்பாலா-/காதல்-/கவிதை/தத்துவம்/-”வாழும் தத்துவத்தை”
ஆறாறு தத்துவம் ஏதடா? ஆணவம்தான் ஏதடா? வாழ் நாளிலே
மாறாத வினைகளும் தான் ஏதடா?
நானென்பதும் ஏதடா? நீயென்பதும் ஏதடா?தன்னலம் தான் ஏனடா?
நாமென்பது ஒன்றுதான் வாழும் தத்துவத்தை சொல்லுமடா!
மாறாத வினைகளும் தான் ஏதடா?
நானென்பதும் ஏதடா? நீயென்பதும் ஏதடா?தன்னலம் தான் ஏனடா?
நாமென்பது ஒன்றுதான் வாழும் தத்துவத்தை சொல்லுமடா!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)