பிரபலமான இடுகைகள்

பிரபலமான இடுகைகள்

பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"பெண்கள் நாங்கள் "

ஆண்டாண்டு காலமாய்
ஆணாதிக்க சமூகத்தில பெண்கள் நாங்கள்!
வாழ்ந்து வருகின்ற சமுதாயத்தில்
வாழும் இல்லங்களில் பெண்களாம்
நாங்கள் வாழ்கின்ற பொழுதினிலே!
எங்களைச் செல்லமாய் திட்டினால் கூட
சிணுங்கிக் கொண்டு முகத்தைத்
திருப்பிக் கொள்ளமுடியும் என்றால், அது!
பிறந்த வீட்டில் மட்டுமே பெண்ணுக்குச் சாத்தியம்
எல்லைதனைத் தாண்டாமல்
தொல்லையின்றி உலாவருவது என்று எண்ணிக்கொண்டு
வலம்வருவது பிறந்தவீட்டில்தான் !

புகுந்தவீடு
இந்த வார்த்தைகளே!! பெண்களைத்
துன்பப் படவைக்கிறது!இருந்த
பிறந்தவீட்டை விட்டு
அன்னியமாய் புகுந்தவீட்டை பெண்கள் நாங்களோ!
எதிர்கொள்ளும் தடைகள்தான் எத்தனையோ?

ஒருசில மாமியார்களின் ஏற இறங்கப் பார்வைகள்!
மிகப்பல நாத்தனார்களின் சாடை மாடை பேச்சுக்கள்!
ஒருசில கொழுந்தனார்களின் அதிகார ஆதிக்கங்கள்!
இத்தனைத் தடைகளையும் தாண்டி
அந்த புகுந்தவீட்டில் சுதந்திரமாய் நடைபோடத் துடித்திடும்
எங்களின் போராட்டங்கள்!
மிகச்சில மாமியார்களின் மகளாய் பாவித்து
அன்புசெலுத்திடும் பாலைவனத்தில் ஒரு நீரூற்றும் உண்டு!

பெண்கள்
பொறுப்புணர்வோடு புகுந்தவீட்டில் முழுமைபெற
மறுபடியும் போராடி பெண்ணடிமையாய் ஆகின்றது தான் எதார்த்தம்!

தாயாய், தாரமாய், மகளாய், பேத்தியாய்
எத்தனை அவதாரம் எடுத்தாலும்
அத்தனையிலும் சமூகக் கட்டுப் பாடு என்று
அடிமைப் படுத்தும் தொடரும் அவலங்கள்!

எவ்வளவு கற்றாலும் எவ்வளவு பதவியில் உயர்ந்தாலும்
இன்னும் பெண் தானே என்று கேவலமாய் பார்க்கின்ற வக்கிரங்கள்!
பாலியல் கொடுமையில் இன்னும் விடுபடாமல்
நாள்தோறும் அல்லல்பட்டு துயருக்குள்ளாகும் பெண்கள்! நாங்கள்







புதன், 20 அக்டோபர், 2010

தமிழ்பாலா-/காதல்-/கவிதை/தத்துவம்/-”அழிக்கின்ற செயல்தத்துவம் ”

நெஞ்சகத்தில் நீயிருக்க நின்னையல்லால் ஒருவரையே நினைத்திடுவேனோ?
அஞ்சுகமே நீசிரிக்க நான்சிரிக்க நாளெல்லாம் சந்தோசம் தானோ?
வஞ்சகமே வீழ்த்துகின்ற நல்லுள்ளம் கொண்டு இருப்பது சரிதானே!
இச்சகத்தில் தனியுடைமை அழிக்கின்ற செயல்தத்துவம் முறைதானே!







தமிழ்பாலா-/காதல்-/கவிதை/தத்துவம்/-”வாழும் தத்துவத்தை”

ஆறாறு தத்துவம் ஏதடா? ஆணவம்தான் ஏதடா? வாழ் நாளிலே
மாறாத வினைகளும் தான் ஏதடா?
நானென்பதும் ஏதடா? நீயென்பதும் ஏதடா?தன்னலம் தான் ஏனடா?
நாமென்பது ஒன்றுதான் வாழும் தத்துவத்தை சொல்லுமடா!









சனி, 31 ஜூலை, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணாத தத்துவத்தின் பின்னாலே எந்தவித பயனின்றி சென்று வாழ்வதில் சாதல் மேலன்றோ?

எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணாத தத்துவத்தின் பின்னாலே
எந்தவித பயனின்றி சென்று வாழ்வதில் சாதல் மேலன்றோ?
என்னதான் கற்றால் என்னடா!
எப்பொருளும் பெற்றால் என்னடா!
எந்த பதவி கொண்டாலும் என்னடா!
எந்தபுகழ் அடைந்தாலும் என்னடா!
எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணாத தத்துவத்தின் பின்னாலே
எந்தவித பயனின்றி சென்று வாழ்வதில் சாதல் மேலன்றோ?

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/உனது அன்புள்ளத்தையே! நானுமின்னும் அறிந்திலேனே!

உனது அன்புள்ளத்தையே! நானுமின்னும் அறிந்திலேனே!
என்காதல் வித்தானவளே! கோடிக்காலத்துப் பயிரானவளே!
இனிமையாய் விளைந்த கனியானவளே-அன்புப்
பூவானவளே! புன்னகை மனதானவளே!
உனது அன்புள்ளத்தையே! நானுமின்னும் அறிந்திலேனே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/உன்னை மறந்ததாலே- நானும் உலகை மறந்தேனோ?-அன்பு உவகை மறந்தேனோ?-காதல் உள்ளம் மறந்தேனோ?

உன்னை மறந்ததாலே- நானும்
உலகை மறந்தேனோ?-அன்பு
உவகை மறந்தேனோ?-காதல்
உள்ளம் மறந்தேனோ?-என்னைப் புரிந்து நீயும்!
என்னை அறியாமலே !எனக்குள்ளே நீயிருக்க!
உன்னை அறியாமலே! என்னைப் புரியாமலே!
எனைநான் மறந்ததேனோ?
என்னை மறந்ததாலே !- நானும்
உன்னை மறந்தேனோ?
உன்னை மறந்ததாலே- நானும்
உலகை மறந்தேனோ?-அன்பு
உவகை மறந்தேனோ?-காதல்
உள்ளம் மறந்தேனோ?

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/வாழ் நாளெல்லாம் வறுமையின்றிவாழும் சமுதாயம் உருவாகாதோ?-விலைகள் ஏற்றமில்லாத பொற்காலம் தான் இன்னாட்டில் வரவேண்டுமே!

தாயாரே ! தாயாரே!நீங்களோ!
பெற்றுஅலுக்க வில்லை தாயாரே- நான் ஏன் தானோ?
பிறந்து அலுக்கின்றேன் தெரியவில்லை!தெரிந்துகொள்ள போனபோதோ!
வாக்குரிமை விற்றுவிட்டு வறுமைதனில் வாடுகின்றேன்!-அஞ்சலுறைக்
காசுக்காக அடிமையானேன் தேர்தலன்று ஓர் நாளிலே!-ஐந்து வருடமாக
சோத்துக்கு சிங்கியடித்து சீரழிந்தேன் விலைவாசியாலே!-அடுத்த
தேர்தலும் வந்திருச்சே ஆயிரம்ரூபாய்க்கே விலையாகிப் போனேனே!
வாழ் நாளெல்லாம் வறுமையின்றிவாழும் சமுதாயம் உருவாகாதோ?-விலைகள்
ஏற்றமில்லாத பொற்காலம் தான் இன்னாட்டில் வரவேண்டுமே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/!தனியுடைமைக் கொடுமைக்கே விடிவுகாலம் ஒன்றுபட்ட இயக்கங்களின் வெற்றி வேணுமடா!

ஏட்டுக்குள்ளே அடங்கவில்லை-எந்த
எழுத்துலுமே பொருந்தவில்லை-இந்த
நாட்டுக்குள்ளே போலி அரசியல் குள்ளநரிகளெல்லாம்
ஏகமாகவே சதிராடுதே!
கூட்டுக்குள்ளே வாழுகின்ற
கூடிவாழும் பறவைகளும்-துரோகிகளின்
கூறுகெட்ட சதியாலே
மாறுபடும் இழி நிலையும் மாறாதோ?
ஜன நாயகம் கெட்டுத்தான் போயிடவே!
பண நாயகம் ஆட்சிதான் ஆனதடா!மனிதரையே
பிணந்தின்னும் சாத்திரமாய் ஏறிஅதிகாரம் செய்யும் கொடுமையடா!தனியுடைமைக்
கொடுமைக்கே விடிவுகாலம் ஒன்றுபட்ட இயக்கங்களின் வெற்றி வேணுமடா!

திங்கள், 8 மார்ச், 2010

ஒன்லைன் கதை------

முப்பது வருடத்திற்குமுன் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறந்த பரந்தாமன் தன் ஒரேமகன் பார்த்திபனின் மறைவுக்குப்பின் தன் தொழிலில் கவனம் செலுத்தாது தானும் மெலிவடைந்து நாளடைவினில் இறந்துபோகவும் அவரதுமனைவி கோசலையம்மாள் வாடகைக்கு குடியிருக்கவீடு தேடி வந்த இடத்தில் பார்த்திபனின் பள்ளிதோழன் சரவணன் பார்க்கின்றான்.வந்த இடம் ஏற்கனவே பரந்தாமன் பிளாட் போட்டு விற்ற இடம் அந்த இடமுழுவதும் பரந்தாமன் நகர் என்று பெயரிடப்பட்ட பலகை காட்சி அளித்தது,இன்னும் என்ன பரிதாபம் என்றால் கோசலையம்மாள் அமர்ந்திருக்கும் கோவில் கூட பரந்தாமன் நகரில் அமைந்த அந்தக் கோவிலுக்குக்கூட சிறப்பாக அவர் வாழ்ந்த காலத்தில் பரந்தாமன் தான் பத்து செண்ட் இடம் இனாமாக கொடுத்திருக்கின்றார் ,அதில் அமைந்துள்ள கல்வெட்டில் கூட அவர் பெயரில் உபயம் கோவில்மனையிடம் என்று இருந்தது, அதை சரவணன் சோகத்தோடு சொல்ல கோசலையம்மாள் மிகுந்த சோகத்தோடு நிற்கின்றார்.

செவ்வாய், 2 மார்ச், 2010

காலம் கனிந்ததடி கனவும் நனவானதடி உனது அன்புக் காதலனும் வருவானே!.

காலம் கனிந்ததடி கனவும் நனவானதடி
உனது அன்புக் காதலனும் வருவானே!.
ஆதலினால் உந்தன் காதல் நோயும் தீர்ந்திடுமே!
அன்புக் காதலியே!
ஒளிமின்னும் அழகிய கண்களை உடையவளே!கார்கால
மழையும் பெய்கிறது, மணக்கும் முல்லையும் மலர்கிறது, நிமிர்ந்த குருந்த மரங்களும் அரும்புகளைக் காண விளைந்தனவே!. உனது காதலனும் வருவானே!. ஆதலினால் உந்தன் காதல் நோயும் தீர்ந்திடுமே!

காதலன் அவனே விரைந்து வருவானே வந்தவுடன் -அவன் வந்தவுடனே -எங்கள் . இல்லக் கதவுகளைத் திறந்து காண்போமே"

காதலன் அவனே
விரைந்து வருவானே வந்தவுடன் -அவன் வந்தவுடனே
-எங்கள் . இல்லக் கதவுகளைத் திறந்து காண்போமே"

ஆசையினாலே தேம்பிடும், என்னிள நெஞ்சே!-அன்புக் காதலனே!
தேன் கலந்த சொல்லினையே தெளித்தானோ?
தலைவியென் மாவடுவைப் பிளந்தாற் போன்ற என்னிரு கண்களிலிருந்து ஆனந்தகண்ணீர் மெதுவாக வழிந்தோடுதே! அந்தோ!என் நெஞ்சே அவன் சென்ற நெடிய பாதையின் வழியே போய்க் கொண்டிருக்கின்றதே!காதலன் அவனே
விரைந்து வருவானே வந்தவுடன் -எங்கள் . இல்லக் கதவுகளைத் திறந்து காண்போமே"

வியாழன், 11 பிப்ரவரி, 2010

காதலில் இனியது இனிப்பது காற்றினில் காதலர் பறப்பது

காத்துக் கிடப்பதும் காக்கவைப்பதும் காதலின் இதமானது
காதலில் இனியது இனிப்பது
காற்றினில் காதலர் பறப்பது
காத்துக் கிடப்பதும் காக்கவைப்பதும் காதலின் இதமானது
கண்ணில் சுகமும் நெஞ்சில் இதமும் சுவையானது

புதன், 20 ஜனவரி, 2010

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/மெய்யறிவுதான் பகுத்தறிவுதான் கொண்டு உய்ர்ந்திடுவோம் எனதோழியே என்காதலியே!

எனதுயிரே எனதறிவே! எனக்கினிய உறவே!எனதோழியே என்காதலியே!
என்னழகே என்னிலவே! எனக்கினிய துணையே!எனதோழியே என்காதலியே!
என்விண்ணே ! என்மண்ணே!எனதோழியே என்காதலியே!
எனதினிய தமிழ்மொழியே!எனதோழியே என்காதலியே!
என்விழியே என்னொளியே!எனதோழியே என்காதலியே!
என்னாளும் உன் துணைகொண்டு எதையும் நாம்வெல்லுவோமே!எனதோழியே என்காதலியே!
உன்னை நான் அறிந்துகொண்டேன் என்னை நீபுரிந்துகொண்டாய் எனதோழியே என்காதலியே!
உலகினில் மெய்யறிவுதான் பகுத்தறிவுதான் கொண்டு உய்ர்ந்திடுவோம் எனதோழியே என்காதலியே!

சனி, 9 ஜனவரி, 2010

தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/சின்னபட்ஜட் தயாரிப்பாளர் நண்பர்களுக்கு/ அமீர்[திரைப்பட இயக்கநர்]அவர்களுக்கும்,சின்னபட்ஜட் தயாரிப்பாளர்களுக்கும்!

கதாநாயகி தன் அபார உழைப்பால் எத்தனையோ சோதனைகளைத் தாண்டி தன் நிறுவனத்தில் படிப்படியாக முன்னேறி ஒரு பெரிய பதவிக்கு வர கடினமாக உழைத்து ஒரு பெரிய தேர்வை எழுதி அதிலும் ஜெயித்திடும் நிலையினில் உயர் அதிகாரி அவளை அழைத்து அவளது புரமோசனுக்கு அட்ஜஸ்மண்ட் அதாவது அவனது பாலியல் பலாத்கார,தவறான நோக்கத்திற்கு உடன்பட்டால் உனக்கு புரமோசன் என்று சொல்லவும் ,அதற்கு அவள் அப்போதே அந்த நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தான் சிறிய கம்பேனியில் சேர்ந்து ,அதை உயர்த்தி அந்த கம்பெனியின் நிர்வாக பொறுப்பினில் தற்போது,ஆனால் பழைய கம்பெனியின் நிர்வாகியோ தற்போது பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது சிறைக்கம்பிகளுக்கு இடையினிலே!
தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/சின்னபட்ஜட் தயாரிப்பாளர் நண்பர்களுக்கு/
அமீர்[திரைப்பட இயக்கநர்]அவர்களுக்கும்,சின்னபட்ஜட் தயாரிப்பாளர்களுக்கும்!

தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/ அமீர்[திரை இயக்குநர்]அவர்களுக்கும்,சின்னபட்ஜட் தயாரிப்பு நண்பர்களுக்கும்!சின்னபட்ஜட் தயாரிப்பாளருக்கு/

கணவன் மனைவி இரண்டு குழந்தைகள்,கணவன் தொழிலின் நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு பைனான்சியரிடம் கடன் உதவிபெற்று தன் தொழிலினை மேம்படுத்த ,தான் மட்டும் தனியாய் சென்றால் உதவி[கடன்]கிடைக்காது என்று நீயும் வாவென்று துணைக்கு அழைத்து ,அந்த பைனான்சியருக்கு அட்ஜஸ்மண்ட் செய்யச் சொல்ல,அந்த ஈனபிழைப்பிற்கு மனைவி மறுத்து,கணவனிடமிருந்து விவாகரத்துபெற்று தனியாக ஒரு கம்பெனியில் வேலைசெய்து உயர் நிலைக்கு வருகின்றாள்,அதற்கு அவளின் தாயார் பின்புலமாக இருக்கின்றார்.
தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/ சின்னபட்ஜட் தயாரிப்பாளருக்கு/
அமீர்[திரை இயக்குநர்]அவர்களுக்கும்,சின்னபட்ஜட் தயாரிப்பு நண்பர்களுக்கும்!

தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/சினிமா தயாரிக்க/அமீர் [திரைப்பட இயக்குநர்] அவர்கள் கவனத்திற்கும்,மற்றும் சின்னபட்ஜட் தயாரிப்பளருக்கும்!

கணவன் தனியார் அலுவலகத்தில் வேலைபார்க்கும் மனைவியின் முதலாளியிடம் ,தனது தொழில் அபிவிருத்திக்குக் உதவிகேட்க,மனைவியும் வீட்டிற்கு அழைத்துவர முதலாளியும் தொழிலுக்குத் தக்கபண உதவி செய்கின்றான்,முதலாளி வந்து போன நாளிலுருந்து மனைவி கணவனைக் காணாது தேடித்துன்புருகின்றாள்,கணவனின் தாயாரும் மகனைக் காணாது துன்பம் அடைகின்றாள், சில நாள்கழித்து கணவனின் பிணம் பக்கத்தில் உள்ள பூங்காவின் புதரில் கிடக்கின்றது,பின் விசாரணையில் முதலாளி ,அந்த கணவன்,அவனின் மனைவியை தான் அடைவதற்குத் தடையாய் இருக்கின்றான் என்று கருதி அவனைத் தாதாக்கள்[கூலிப்படைகள்] வைத்துக் கொலைசெய்துவிடுகின்றான் என்றுத் தெரிய வருகின்றது,ஜெயிலுக்குப் போகின்றான்,ஜாமீனில் வந்து கேஸ் நடத்தி கொலைக்குற்றத்தில் இருந்து தப்பித்துத் தன் மனைவியோடு சந்தோசத்தோடு இருக்கின்றான். அந்த மனைவியோ வேறு ஒருவரை மணமுடித்து சந்தோசத்தோடு ஆனால்!
அந்த இறந்த கணவனின் தாயாரோ தன் மகனை இழந்த துக்கத்தோடு நடு ரோட்டினிலே!

வியாழன், 7 ஜனவரி, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒரே ஒரு அழகுசிறு மலரையே உருவாக்கிடவே! பலயுகங்களின் உழைப்பு தேவையல்லவா?

ஒரே ஒரு அழகுசிறு மலரையே உருவாக்கிடவே!
பலயுகங்களின் உழைப்பு தேவையல்லவா?
மொட்டின் சுவைகசப்பதுண்டு--ஆனாலும் அழகு
மலகளின் இனிமையோ! சுவைப்பதுண்டே!
அதரங்கள் சொல்ல நாணும் அன்புக் காதல் கவிதையையே!
அழகு மலர்கள் கூறுவதையே அறியாத காதலர்களே! உலகிலுண்டோ?
அந்த மலர்களின் ஒலியில்லாத உதடுகளே!
உயிருள்ள போதகர்கள் அல்லவா?-அதன்
ஒவ்வொரு மலர்கொத்தும் ஓர் உபதேச மேடையல்லவா?-அதன்
ஒவ்வொரு இதழ்களுமே ஒருபுத்தகம் அல்லவா?

திங்கள், 4 ஜனவரி, 2010

தமிழ்பாலா-/கவிதை/காதல்/காதலியே உன்கண்மீன்களே எந்தமீனையும் மிஞ்சுகின்ற அன்புப்பரிசுதான் அல்லவா?

மலர்களே மண்ணகத்து விண்மீன்கள் அல்லவா?
விண்மீன்களே விண்ணகத்து மலர்கள் அல்லவா?-காதலியே உன்கண்மீன்களே
எந்தமீனையும் மிஞ்சுகின்ற அன்புப்பரிசுதான் அல்லவா?

வெள்ளி, 1 ஜனவரி, 2010

தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/நந்தவனம் பூத்திருச்சு!-இந்த நடுக்கிணறும் நெறைஞ்சிருச்சு! பூங்காவனமும் புன்னகையாச்சு! புதுத்தாமரையும் நன்னகையாச்சு!

தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/
நந்தவனம் பூத்திருச்சு!-இந்த
நடுக்கிணறும் நெறைஞ்சிருச்சு!
பூங்காவனமும் புன்னகையாச்சு!
புதுத்தாமரையும் நன்னகையாச்சு!
மச்சானின் உழைப்பாச்சு-!
மச்சினிச்சி சிரிப்பாச்சு!