ஆண்டாண்டு காலமாய்
ஆணாதிக்க சமூகத்தில பெண்கள் நாங்கள்!
வாழ்ந்து வருகின்ற சமுதாயத்தில்
வாழும் இல்லங்களில் பெண்களாம்
நாங்கள் வாழ்கின்ற பொழுதினிலே!
எங்களைச் செல்லமாய் திட்டினால் கூட
சிணுங்கிக் கொண்டு முகத்தைத்
திருப்பிக் கொள்ளமுடியும் என்றால், அது!
பிறந்த வீட்டில் மட்டுமே பெண்ணுக்குச் சாத்தியம்
எல்லைதனைத் தாண்டாமல்
தொல்லையின்றி உலாவருவது என்று எண்ணிக்கொண்டு
வலம்வருவது பிறந்தவீட்டில்தான் !
புகுந்தவீடு
இந்த வார்த்தைகளே!! பெண்களைத்
துன்பப் படவைக்கிறது!இருந்த
பிறந்தவீட்டை விட்டு
அன்னியமாய் புகுந்தவீட்டை பெண்கள் நாங்களோ!
எதிர்கொள்ளும் தடைகள்தான் எத்தனையோ?
ஒருசில மாமியார்களின் ஏற இறங்கப் பார்வைகள்!
மிகப்பல நாத்தனார்களின் சாடை மாடை பேச்சுக்கள்!
ஒருசில கொழுந்தனார்களின் அதிகார ஆதிக்கங்கள்!
இத்தனைத் தடைகளையும் தாண்டி
அந்த புகுந்தவீட்டில் சுதந்திரமாய் நடைபோடத் துடித்திடும்
எங்களின் போராட்டங்கள்!
மிகச்சில மாமியார்களின் மகளாய் பாவித்து
அன்புசெலுத்திடும் பாலைவனத்தில் ஒரு நீரூற்றும் உண்டு!
பெண்கள்
பொறுப்புணர்வோடு புகுந்தவீட்டில் முழுமைபெற
மறுபடியும் போராடி பெண்ணடிமையாய் ஆகின்றது தான் எதார்த்தம்!
தாயாய், தாரமாய், மகளாய், பேத்தியாய்
எத்தனை அவதாரம் எடுத்தாலும்
அத்தனையிலும் சமூகக் கட்டுப் பாடு என்று
அடிமைப் படுத்தும் தொடரும் அவலங்கள்!
எவ்வளவு கற்றாலும் எவ்வளவு பதவியில் உயர்ந்தாலும்
இன்னும் பெண் தானே என்று கேவலமாய் பார்க்கின்ற வக்கிரங்கள்!
பாலியல் கொடுமையில் இன்னும் விடுபடாமல்
நாள்தோறும் அல்லல்பட்டு துயருக்குள்ளாகும் பெண்கள்! நாங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக