ஒரே ஒரு அழகுசிறு மலரையே உருவாக்கிடவே!
பலயுகங்களின் உழைப்பு தேவையல்லவா?
மொட்டின் சுவைகசப்பதுண்டு--ஆனாலும் அழகு
மலகளின் இனிமையோ! சுவைப்பதுண்டே!
அதரங்கள் சொல்ல நாணும் அன்புக் காதல் கவிதையையே!
அழகு மலர்கள் கூறுவதையே அறியாத காதலர்களே! உலகிலுண்டோ?
அந்த மலர்களின் ஒலியில்லாத உதடுகளே!
உயிருள்ள போதகர்கள் அல்லவா?-அதன்
ஒவ்வொரு மலர்கொத்தும் ஓர் உபதேச மேடையல்லவா?-அதன்
ஒவ்வொரு இதழ்களுமே ஒருபுத்தகம் அல்லவா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக