ஏட்டுக்குள்ளே அடங்கவில்லை-எந்த
எழுத்துலுமே பொருந்தவில்லை-இந்த
நாட்டுக்குள்ளே போலி அரசியல் குள்ளநரிகளெல்லாம்
ஏகமாகவே சதிராடுதே!
கூட்டுக்குள்ளே வாழுகின்ற
கூடிவாழும் பறவைகளும்-துரோகிகளின்
கூறுகெட்ட சதியாலே
மாறுபடும் இழி நிலையும் மாறாதோ?
ஜன நாயகம் கெட்டுத்தான் போயிடவே!
பண நாயகம் ஆட்சிதான் ஆனதடா!மனிதரையே
பிணந்தின்னும் சாத்திரமாய் ஏறிஅதிகாரம் செய்யும் கொடுமையடா!தனியுடைமைக்
கொடுமைக்கே விடிவுகாலம் ஒன்றுபட்ட இயக்கங்களின் வெற்றி வேணுமடா!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக